பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


பட்டப்பகலைப்போல் நிலவு வீசும் இரவில் மேல்மாடியில் மங்கையொருத்தி கலவியின்பத்தில் திளைத்த பிறகு தூங்கி விடுகிறாள். அவள் அணிந்திருந்த ஆடை நெகிழ்ந்துபோய் விடுகிறது. அரைத் துக்கத்தில் நிலவொளியை ஆடையென நினைத்துக் கொண்டு அதைப் பற்றி இழுத்து உடுத்திக் கொள்ள முனைகிறாள். இதைக் கவிஞர்,

கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடந் திறமினோ.[1]

என்று காட்டுகிறார்.

கலவிப் போரில் ஒருத்தியின் கொங்கையில் எப்படியோ நகக்குறி ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் குறியை அடிக்கடி பார்க்கும் பொழுதெல்லாம் கலவியில் தான் பெற்ற இன்பத்தை அடைகிறாள். நித்திய தரித்திரன் ஒருவனுக்கு எதிர்பாராத வண்ணம் நிறைந்த பொருட் குவியல் கிடைத்தால் அவன் அச்சத்தின் மிகுதியால் அப்பொருட் குவியலைப் பிறர் அறியாவண்ணம் பார்த்துப் பார்த்துப் பெரு மகிழ்ச்சியுறுதல் போல, தன் கொங்கையில் புதியனவாய்த் தோன்றியுள்ள தம் கொழுநரின் நகக் குறியை நாணம் மிகுதியால் தனியிடத்திற்குச் சென்று அங்குப் பார்த்துப் பார்த்து மகிழ்கின்றாள். இதனைச் சயங்கொண்டார்,


  1. தாழிசை-34,