பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பயன்பட்டு அதற்குத் துணையாக நிற்பதி நாம் அறிய வேண்டி தொன்று. இவற்றைச் சற்று விரிவாக ஆராய்வோம்.

தன்னைப்பற்றிய மெய்யறிவு உண்டாதல்: தன்னைப்பற்றிய மெய்யறிவு மிகவும் இன்றியமையாதது; ஒவ்வொருவருக்கு முக்கியமாக வேண்டப்பெறுவது. 'உன்னையே அறிந்துகொள்: என்பது ஆன்றோரின் அருள்மொழி, நமது வாழ்க்கைத் தொழிலும் நிலையும் எங்ஙனமிருப்பினும், வாழவேண்டிய வர்கள் நாம் என்பது ஒருதலை. மிகச் சிக்கலான தனிவீற்றினைக் [1]கொண்ட நாம் எண்ணங்களிலும், உணர்ச்சி உளவியல்களிலும், நடத்தையிலும் வேறுபடுகின்றோம். - என்பதோ பொதுவான முறைகளைப்பற்றிக் கூறும் ஒரு துறை. அதனால் நம் சொந்தப் பிரச்சினைகளுக்கு உளவியலைக் கொண்டு தீர்வும் விளக்கமும் காண்பதென்பது இயலாத தொன்று. எனினும் எண்ணம், உன ர்ச்சி, நடத்தை போன்ற வற்றைப்பற்றிப் படிப்பதனால் அறிந்து கொள்ளுங் கருத்து களை நமது சோந்தப் பிரச்சினையிலும் பயன்படுத்தலாம். உள்ளக்கிளர்ச்சி, சமூகம், சிந்தனை, முதலியவற்றில் எழும் தேவைகளை யொட்டி நம்மோடும் உலகத்துடனும் நாம் ஒட்ட ஒழுகுவதற்குரிய வழிவகைகளை உளவியல்மூலம் அறிந்து கொள்ளலாம்.

மற்றவர்களைச் சரியாக உணர்ந்து கொள்ள உதவுதல்: இவ் வுலகில் நாம் பிறருடன் இசைந்து வாழவேண்டுமாயின், அவர்களுடைய எண்ணங்கள்: உணர்ச்சிகள், செயல்கள் முதலிய வற்றிற்குரிய காரணங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். மாணாக்கர்களில் சிலர் அதிகம் உழைக்காமலேயே குறைந்த முயற்சியால் உயர்ந்த மதிப்பெண்கள் பெறுவதற்கும், வேறு சிலர் எவ்வளவு வருந்தி உழைத்தாலும் தேர்ச்சியடையாமல் இருப்பதற்கும் காரணம் என்ன? இவ்வளவு வேற்றுமை ஏன் காணப்படுகின்றது: உலகிலுள்ள பல்வேறு மக்களிடையே காணப்பெறும் பல்வேறுபட்ட அநுபவங்கள், கருத்துகள்: உணர்ச்சிகள் முதலியவற்றிற்குக் காரணம் யாது? அவர்களது. பிறப்பிலேயே இவ்வேற்றுமைகள் அமைந்திருந்தனவா? அல்லது அவர்கள் வாழும் சூழ்நிலை காரணமாக அவை ஏற்பட்டனவா? சமூகத்திலுள்ள மனிதர்களின் நடத்தை பல்வேறு விதமாகக் காணப்பெறுவதற்குக் காரணம் என்ன? என்பனபோன்ற வினாக்களுக்கு விடை காண உளவியல் துணை செய்கின்றது. இச் சிறுநூலில் அனைத்தையும் விளக்க இயலாது. உளவியல்


  1. 30,தனிவீறு-individuality.