இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10. கவிஞன் உள்ளம் (புறம். பின்புறம்; தாழ்பு - தாழ்ந்து, செல்லல் - துன்பம்; எய்யாமை - அறியாமை, இழிவு . இகழ்ச்சி, விடையல். விாையாதே; மருப்பு - யானைக்கொம்பு; விவது - அழி வது.) 橄 米 * * இந்த அரிய கவிதை அக்காலத்தில் உள்ள புல வர்களின் மனதைக் கவர்கிறது; அவர்கள் நெஞ்சத்தை அள்ளுகிறது. கவிதை வெளிப்பட்ட நாள் முதல் கவி ஞனே அவர்கள் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவ னேக் காணும்போதெல்லாம் தேய்புரி பழங்கயிறு தான் அவ்ர்கள் கினேவுக்கு வருகிறது. ஆதலால் அவர்கள் கவிஞனேத் தேய்புரி பழங்கயிற்றினர்' என்றே அழைக்கத் தலைப்பட்டனர்.