பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

காற்றில் வந்த கவிதை


ஒரு கிராமத்துக்குப் பக்கத்திலே கருங்காடு என்ற பெயருடைய ஒரு காடு இருந்தது. அதிலே ஒரு பெரிய பாறை உண்டு. பாறைக்குப் பக்கத்திலே தண்ணிர் தங்கியிருக்கும் ஒரு குட்டையும் இருந்தது. அந்தக் கருங்காட்டுப் பாறையிலே ஒரு சந்திலே கல்லையெல்லாம் நன்முக ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு ஆக்காட்டி கூடு கட்டியது. அதிலே நான்கு முட்டை வைத்தது. ஆனல், ஒரு முட்டை கெட்டுப் போய்விட்டது. மூன்று முட்டைகளிலிருந்து மூன்று குஞ்சுகள் வெளிவந்தன. அந்தக் குஞ்சுகளை அந்த ஆக்காட்டி மிக அன்போடு வளர்த்து வந்தது. திசையெல்லாம் பறந்து பறந்து போய் இரை தேடிக் கொண்டுவந்து கொடுத்தது. இப்படி வளர்க்கிற போது ஒருநாள் அந்த ஆக்காட்டி முதல் குஞ்சுக்கு இரைதேடி மூன்று காத தூரம் போய்விட்டு வந்தது. காதம் என்று சொன்னல் சுமார் பத்து மைல் தூரம் இருக்கும். அப்படி அது மூன்று காதம் போய்விட்டு வந்தது. பிறகு இரண்டாவது குஞ்சுக்கு இரை தேடிப் புறப்பட்டது. மூன்று குஞ்சுகளிலே இரண்டாவது குஞ்சுதானே நடுக்குஞ்சு? அந்த நடுக்குஞ்சுக்கு இரை தேடி நாலு காதம் போய்விட்டு வந்தது. பிறகு மறுபடியும் புறப்பட்டது. கடைசிக் குஞ்சுக்கு இரை தேடி ரொம்பதுாரம், கனதுாரம் போய்விட்டு வந்தது.

இப்படி அந்த ஆக்காட்டி போகிறதையும் வருகிறதையும் ஒரு பையன் பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் அந்தக் கருங்காட்டுப் பாறைக்குப் பக்கத்திலே இருந்த குட்டையிலே துணி துவைக்க வந்தவன். அவன் அந்த ஆக் காட்டியைக் கவனித்துக் கொண்டே இருந்தான். அது கடைசிக் குஞ்சுக்கு இரை தேடிச் சென்ற சமயம் பார்த்து அந்த ஆக்காட்டியின் கூட்டிலே கண்ணி வைத்துவிட்டான். ஆக்காட்டி கூட்டுக்குள்ளே நுழைகிற இடத்திலே அதை வைத்துவிட்டான்.

அந்த ஆக்காட்டி நெடுந்துாரம் சுற்றி இரையெடுத்துக் கொண்டு வேகமாகப் பறந்து வந்தது. கடைசிக் குஞ்சு