பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆக்காட்டி

11


பசியினால் வாடுமே என்று அதற்கு அத்தனை அவசரம். அப்படி அவசரமாக வந்ததினலே கண்ணியிருந்ததைக் கவனிக்கவில்லை. அதனுடைய கால்கள் இரண்டும் கண்ணியிலே மாட்டிக்கொண்டன. இறக்கைகளை அது படபடவென்று அடித்துக்கொண்டு துடித்தது; அழுதது. வலையில் அகப்பட்ட அந்தப் பறவை அழுதுகொண்டே இருக்கவே அதன் கண்ணிர் வெள்ளமாக ஒட ஆரம்பித்துவிட்டது. குதிரையைக் கூட அந்த வெள்ளத்திலே கொண்டுவந்து குளிப்பாட்டினர்களாம். ஆடு மாடுகள் எல்லாம் வந்து வெள்ளமாக ஓடும் கண்ணிரையே தாகத்துக்குக் குடித்தனவாம். எல்லோரும் பார்த்து, ஐயோ பாவம்' என்று சொல்லும்படி அந்த ஆக்காட்டி அழுதுகொண்டே இருந்ததாம்.

அந்த ஆக்காட்டியை ஒரு சின்னக் குழந்தை, "ஆக்காட்டியே, நீ எங்கே முட்டை வைத்தாய்?" என்று கேட்டதாம். உடனே அந்த ஆக்காட்டி அந்தக் குழந்தையிடத்திலே தன் னுடைய துன்பக் கதையைச் சொல்லிக்கொண்டே அழுததாம்.

"ஆக்சாட்டி ஆக்சாட்டி எங்கெங்கே முட்டை
                                                  வைத்தாய்?"

"கல்லைத் திறந்து கருங்காட்டுப் பாறையிலே
இட்டது நாலு முட்டை, பொரித்தது மூணுகுஞ்சு,
முதற்குஞ்சுக் கிரைதேடி மூனுகாதம் போய்வந்தேன்;
நடுக்குஞ்சுக் கிரைதேடி நாலு காதம் போய் வந்தேன்;
கடைசிக் குஞ்சுக் கிரைதேடிக் கனதுTரம் போய்
                                                         வந்தேன்;
வண்ணுரப் பாவி மகன் பார்த்திருந்து கண்ணி
                                                வைத்தான்
காலிரண்டும் கண்ணியிலே கையிரண்டும் மாரடிக்க