பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

காற்றில் வந்த கவிதை

நான் அழுத கண்ணிரோ நாடெல்லாம் வெள்ளம்போய்
குண்டு குளம் ரொம்பிக் குதிரை குளிப்பாட்டி
ஆடுகளும் மாடுகளும் அங்கு வந்து நீர் குடிக்க
எங்கும் பரந்ததுவே எல்லோரும் பார்த்துருக."
[குண்டு-குழி, ரொம்பி-நிரம்பி.]

கொங்கு நாட்டுக் கிராமத்திலே மாடு மேய்க்கும் சிறுவர்கள் இந்தப் பாட்டைப் பாடுவார்கள்.

ஆக்காட்டியின் குரலைக் கேட்கும்போதெல்லாம் இந்தப் பாட்டு என் நினைவுக்கு வரும்.