பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடும்பாவி

27

காலம் தெளிய வேணும் காரிமழை பெய்ய வேணும்
ஊரு தெளியவேணும் உத்த மழை பெய்யவேணும்
கோடை மழை பெய்யவேணும் குடிமக்கள் வாழவேனும்
மாசி மழை பெய்யவேணும் மரங்கள் தழைய வேணும்
கொடும்பாவி சாகவேனும் கொள்ளைமழை
                                                பெய்யவேனும்
மாபாவி சாகவேணும் மாய மழை பெய்யவேணும்
ஊசிபோல மின்னல் மின்னி உதயம்போல் காலிறங்கி
பாசிபோல மின்னல் மின்னிப் பவளம்போல் காலிறங்கி
சந்து சந்தா மின்னல் மின்னி சலமூலை தண்ணிர் வர
கொடி கொடியா மின்னல் மின்னிக்கொடிமூலை
                                                      தண்ணிர்வர
வானமழை ராசாவே வான மகாதேவா
வான மகாதேவா மழையாய்ப் பொழியவேணும்

[சோனை மழை - விடாது பெய்யும் மழை. பெத்த - பெற்ற சாவியாதல் - தானியமணிகள் பிடியாமல் பதராகப் போதல். காரி மழை - கார் மழை. உத்த - உற்ற..]

காரைப் பழத்தையும், சூரிப் பழத்தையும் செழித்த காலத்தில் யாரும் தீண்டமாட்டார்கள். கஞ்சிக்கு வாடுகின்ற காலத்தில் அவற்றையும் பறித்து மக்கள் உண்டு பசியாற்றிக்கொள்ள முயற்சி செய்கிரு.ர்கள். காரைச் செடியிலும் சூரி மரத்திலும் முள் நிறைய இருக்கும். அவற்றிலே பழம் பறிப்பதென்ருல் கையெல்லாம் முள் தைக்கும்.