இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா
15
மனைவிமக்களைக் கழுதை என்றான் பொறுத்தார்
மற்றவரைக் கழுதை என்றான் வெறுத்தார்.
அனைவரையும் கழுதைஎன்று
பேசியதால் ஏசியதால்
அனைவருமே ‘கழுதை’ என்றார் சிரித்தார்!
◯
அமைச்சர் வந்து குருதிக்கொடை கொடுத்தார்
அடிபட்ட வள்ளலார்க்கதைக் கொடுத்தார்;
இமைப்பொழுதில் உயிர் பிழைத்தார்
இரவுக்குப்பின் விடிவு, பார்த்தால்
மருத்துவமனை காணோம், ஓட்டம் எடுத்தார்!
◯
சட்டமன்ற விதிகளிலே ஒன்று
பொய்புகன்றார் எனச்சொலல் சால் பன்று:
இட்டமுடன் அமைச்சரெலாம்
உண்மையிலா மொழிபுகலச்
சட்டம் வைத்துக் கொண்டதுவும் நன்று!
◯
இருமணத்துப் பெண்டிர்களை வளர்த்தான்
எத்துக்கெல்லாம் மூலமுதல் உளத்தான்;
திருடித் திருடிப் பாட்டெழுதித்
திரைபடத்துக் கழிகாமக்
கறுப்புப்பணப் பிள்ளைபெற்றுத் திளைத்தான்!