பக்கம்:குறும்பா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

39


வேலியற்ற.தோட்டமானாள் மாது.
விரைந்து கட்சியில் சேர்த்துவிட்டான் சேது.
கூலிக்கழும் கொள்கையிலாக்
கூட்டத்தினர் மேடையிட்டார்;
தோளில் மாலை; நோய்ச் சுரங்கம் இப்போது!



இலக்கணங்கள் எண்ணங்கட்கு வேலி
என்றுசொன்னான் பெற்றோர் அறியா வாலி.
விலக்கிடுக முன்னோர் நெறி
விளையும்புத் திலக்கியம் என்றான்
இலத்தரசியும் விலக்கி விட்டாள் தாலி!



இளைஞரெலாம் போர்ப்படையின் ஈட்டி,
இனியபொது வுடைமைக்குவழி காட்டி,
வளைந்திடாத எஃகுப் பாளம்,
வானளக்கும் விண்கணைகள்
நிலைக்கும் நட்பின் அமைதிப் போரின் தோட்டி!



உலகறிய வேண்டுமென்ற முறையில்,
நாட்டு மன்ற உறுப்பினரை விரைவில்
பலரை வெளி நாடனுப்ப...
பகலிரவாய்ச் செய்ததினால்,
பலரும் கள்ளக் கடத்திலினால் சிறையில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/42&oldid=1201065" இலிருந்து மீள்விக்கப்பட்டது