பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. எண்ணித் துணியும் பேராற்றல்

னிதனுக்குத் தனிப்பட்ட ஒரு விசேஷ சக்தி இருக்கின்றது. அது என்ன என்று யோசிக்கும்போது அந்த யோசிக்கும் சக்தியேதான் அது என்று ஏற்படுகிறது. ஆம், மனிதனுடைய தனிப் பெருமை அவனுக்குள்ள சிங்தனா சக்திதான். ஆகையால் அதை எவ்வளவுக்கு மனிதன் அபிவிருத்தி செய்து கொள்ளுகிறானோ அவ்வளவுக்கு அவன் மேம்பாடடைகின்றான்.

மனிதனுடைய ஆற்றல்களை நன்கு மலரும்படி செய்ய வேண்டுமானால், ஒரு முக்கியமான உண்மையை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே மனிதனுடைய பிற்கால வாழ்க்கையின் போக்கு நிர்ணயமாகிவிடுகிறது என்று மனத்தத்துவர்கள் கண்டிருக்கிறார்கள். மறை மனத்தைப் பற்றி முதல் முதலாக ஆராய்ந்த பிராய்டு என்பவர், ‘ஐந்து வயதிற்குள்ளேயே மனிதன் தனது பூரண அமைப்பையும் அநேகமாகப் பெற்றுவிடுகிறான்’ என்கிறார். பலதிறப்பட்ட அபிப்பிராயங்களுடைய மனத் தத்துவர்களும் இந்த விஷயத்திலே பொதுவாக ஒரேமாதிரியான எண்ணங்கொண்டிருக்கிறார்கள். இளம் பிராயத்திலே மனிதனுடைய வாழ்க்கையின் முழு உருவம் பெரும்பான்மையும் அமைந்து விடுகிறது என்பதுதான் அவர்களுடைய முடிவு. ஆகையால் அந்தப் பருவத்திலேயே அடக்கி ஒடுக்கப்படாது நன்கு மலர்வதற்கு வேண்டிய வசதி அளிக்கப்பட்ட ஆற்றல்களே மேலோங்கும். சிறுவர்களுடைய சிந்தனா சக்தி இந்த விதிக்கு மாறுபட்டதல்ல. இளமையிலிருந்தே