பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. அடிக்கலாமா

'டியாத பிள்ளை படியாது' என்று எப்படியோ ஒரு பழமொழி தமிழிலே தவறாகத் தோன்றிவிட்டது. பலர் இதை வேதவாக்காக மதிக்கிறார்கள். இதை முழு மனத்தோடு பின்பற்றினால்தான் குழந்தைகளே கன்கு வளர்க்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

"கையில் அடிக்காதே; குழந்தை மந்தியாய்ப் போய் விடும்; ஒரு சின்ன மிளார் வைத்துக்கொண்டு சுருக்கென்று அடி கொடுக்க வேண்டும்" என்று சிலர் போதனை செய்வதை நான் கேட்டிருக்கிறேன்.

ஒரு சமயம் நான் ரெயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது ஒரு ரசமான சம்பாஷணை என் காதில் விழுந்தது.

வீட்டை விட்டு ஓடிப்போன தன் மகனைத் தேடிக் கொண்டு ஒருவர் புறப்பட்டிருக்கிறார் அவர் அதைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.

"நீங்கள் பையனுக்கு மிகவும் செல்லம் கொடுத்திருப்பீர்கள். அதனால்தான் அவன் யாருக்கும் அடங்காமல் ஓடியிருக்கிறான்” என்றார் ஒரு பிரயாணி.

"அடித்து மிரட்டி வைத்திருந்தால் இப்படி ஓடுவான்” என்று கேள்வி போட்டார் மற்றொருவர்.

"நான் அடிக்காத அடியா? எத்தனை தடவை அடித்திருக்கிறேன்! ஒவ்வொரு நாளைக்குப் பிரம்பை எடுத்தால் உரித்துப் போடுவேன்” என்றார் காணாமற்போன பையனுடைய தகப்பனர்.