பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

 வள்ளி திருமணக் கதையையொட்டி ஒயிலாட்டம் இரவெல்லாம் நடந்தது. வெவ்வேறு வகையான சந்தங்களில் பாடிக் கொண்டு, எதிரெதிராக இரண்டு வரிசைகளில் இளைஞர்கள் நின்று பல விதமாக ஆடுவதைப் பார்ப்பதில் எல்லோருக்கும் முதலில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், நாள் முழுவதும் பயணம் செய்த அலுப்பினால் கண்ணகி முதலில் தூங்கி விழத் தொடங்கினாள். சிறுவர்களுக்கும் களைப்பேற்பட்டு விட்டது. ஜின்கா கொஞ்ச நேரம் கூடவே ஆடிக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு தங்கமணியின் மடியில் வந்து படுத்துக் கொண்டது. அதனால் வள்ளிநாயகி எல்லாரையும் அழைத்துக் கொண்டு சத்திரத்திற்குப் புறப்பட்டாள். வடிவேலுவும் பின் தொடர்ந்தார்.