பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

இருங்கள். உங்களுக்கு எவ்விதத் தீங்கும் நேராது. சுந்தரம் தன்னுடைய கேலிப் பேச்சினால் எல்லாருக்கும் தைரியமூட்டுவான் என்று நம்புகிறேன்.
உங்கள் அன்புள்ள,
வள்ளிநாயகி.

இவ்வாறு கடிதம் எழுதி, அதை மடித்து. ஓர் உருண்டையான சிமிழுக்குள் மடித்துப் போட்டு நன்றாக மூடினாள். ஜின்கா அதைத் தன் வாயில் போட்டு, கன்னத்தில் அடக்கிக் கொண்டு புறப்படத் தயாராயிற்று. ஆனால், அதைக் கொஞ்ச நேரம் தாமதிக்கும்படி வள்ளிநாயகி சைகை செய்தாள். ஒரு தட்டிலே அதற்கு வேண்டிய உணவுகளையெல்லாம் அவசரம் அவசரமாக எடுத்து வைத்தாள்.

"ஜின்கா, சாப்பிடாமல் நீ போகக்கூடாது. எத்தனை தூரம் நீ போக வேண்டியிருக்குமோ! ஆற்றில் நீந்தி நீந்திச் செல்லவும் வேண்டியிருக்கும். பசியோடு நீ போகக்கூடாது. நன்றாகச் சாப்பிடு" என்று அன்போடு கூறிக்கொண்டே அதைத் தட்டிக்கொடுத்தாள். ஜின்காவும் அவளுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டது. உடனே அந்த உருண்டைச் சிமிழைக் கீழே வைத்துவிட்டு வேகமாக உணவருந்தலாயிற்று. வள்ளிநாயகி ஒரு தாயின் அன்போடு அதைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

உணவு முடிந்ததும் உருண்டைச் சிமிழை வாயில் எடுத்துப் போட்டுக்கொண்டு, ஜின்கா ஆவலோடு வள்ளி நாயகியைப் பார்த்தது. வள்ளிநாயகி அதன் தலையைத் தன் கையால் வருடிக்கொண்டே, "ஜின்கா, இனி நீ போகலாம். உன்னால் தான் குழந்தைகளுக்குத் தைரியம் ஏற்பட வேண்டும்" என்று கூறினாள். ஜின்கா உற்சாகத்தோடு வெளியே பாய்ந்து புறப்பட்டது. வள்ளிநாயகி தானும் வேமாக உணவருந்திவிட்டு வெளியே புறப்படத் தயாரானாள். அப்பொழுது சமையற்காரப் பையனிடம், "யாராவது வந்து விசாரித்தால் நான் கோயிலுக்குப் போயிருப்பதாகச் சொல். கோயிலிலே அங்காளம்மனுக்கு இன்று விசேஷப் பூஜையெல்லாம் நடக்கிறது. அதைப் பார்த்துவிட்டு ரொம்ப நேரம் கழித்துத்தான்

கொ. ம. கு -3