பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

சங்ககாலத் தமிழ் மக்கள்


தற்கு இக்காடு நிலைக்களமாதலால், ‘செந்தமிழியற்கை சிவணிய நிலம்’ எனப் புலவர்களாற் பாராட்டப் பெறுவதாயிற்று.

‘நாட்டின் அமைதிக்கேற்ப அக்காட்டில் தோன்றி வழங்கும் தாய் மொழியின் சொல் வழக்குகள் உருப்பெறுவன’, என்பர். தமிழர் நான்கு திசைகளையும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என வழங்கினர். கீழ், கிழக்கு எனப் பள்ளத்திற்கு வழங்கிய பெயரை ஞாயிறு தோன்றும் திசைக்கும்; மேல், மேற்கு என மேட்டு நிலத்திற்கு வழங்கிய பெயரை ஞாயிறு மறையுங் கிசைக்கும் வழங்குதல் தமிழ் வழக்காகும். இச்சொல் வழக்கினை நோக்கினால், தமிழ் மக்களின் தொன்மைப் பிறப்பிடம் கிழக்குப் பகுதி பள்ளமாகவும் மேற்குப் பகுதி மேடாகவும் அமைந்திருத்தல் வேண்டுமென்பது துணியப்படும். இம்முறையில் அமைந்த நாடு இத்தென்னாடேயென்பதனை நிலநூல் வல்லார் ஏற்றுக்கொள்வர். ஆதலால், தமிழ் மக்களின் தாய்நாடு இத்தென்னாடே என்பதும், தமிழர் இத்தமிழ் நாட்டின் பழங்குடி மக்களே என்பதும் நன்கு துணியப்படும்.

தமிழ் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பகுத்து, நானிலம் என்ற பெயரால் பண்டைத் தமிழாசிரியர்கள் வழங்கினார்கள். மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். இந்நிலப்பகுதியிற் குறிஞ்சிச் செடி மிகுதியாகக் காணப்படுதல் பற்றி இதற்குக் குறிஞ்சியென்று பெயரிட்டனர். காடடர்ந்த நிலம் முல்லையாகும். முல்லைக் கொடி பெருகவுளதாதல் பற்றி இந்நிலம் முல்லையென வழங்கப்பெற்றது. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதமாகும். மருதமென்னும் மரம் இங்கிலத்திற்பெருக வளர்தல் பற்றி இதனை மருதம்