பக்கம்:சாவின் முத்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சாவின் முத்தம்

ஆக்கிய சோறு போலே
அதற்குள்ளே வெளுக்கின் றாயே!

ஆரூகம், சமணம்,கண்ட
அதிர்ச்சியோ மின்னல்? "இந்து
ஒர்யுகம் முதிர்ந்தும் கொஞ்சம்
ஒடிந்ததா குறும்பு" என்று
நீர்வற்றி விட்டா யோநீ!
நிரீஸ்வர மதத்தைக் கண்ட
ஆர்வத்தில் பிறந்த தோஉன்
அழகிய பச்சை மேனி!


மாக்கோலக் கட்டி போன்ற
வானத்தில், குங்கு மம்போல்
பூக்கின்றாய்! முதல்சந் திப்பின்
பூரிப்பைத் தின்கின் றாய்! மின்
வாக்கிதோ! தந்தச் சிம் போ?
மகரமீன் துள்ளல் தானோ?
போக்கிடும் பார்வை, பிள்ளைத்
தொட்டிலோ? ரத்த ஊற்றோ?


நீர்விழுங் கட்டெ றும்பின்
நிழல்போன்ற இலைக்கூட் டத்தை
வாருந்தா மரையைக் கண்டு
வானில்உன் வடிவங் கண்டேன்!
சீர்வைத்துச் சிரிக்கும் தங்கச்
சிரிப்புக்குக் கொழுந்து போலே