பக்கம்:சாவின் முத்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

13

யார்வைத்தார் நாமம்? கண்ணே
அதைமட்டும் எனக்குச் சொல்லு


ஓரிழை யாகி விட்ட
பெளத்தம்போல் இளைத்து, பாவுத்
தார்போலே மேடு காட்டிச்
சரிகின்றாய்! ஒட்ட கத்தின்
பேர்போன கூன லோடு
பறக்கின்றாய்! பட்டா ளத்துக்
கூர்மைபோல் மின்னு கின்றாய்
சிரிக்கின்றாய்! கூவு கின்றாய்!


அலைகளை அடுக்கி வைத்து
அனுப்புதல் போல, வானில்
கலையாத நடைபி ரிக்கும்
ஈரத்தின் பரப்பே! "வாழ்வை
விலைபோட்டு கடத்து கின் றார்
மாந்தர்கள்!" வறுமை வெப்பம்
கொலைசெய்து விட்ட தென்னை!
மறைந்துகொள் கடலுக் குள்ளே!


இசையவிழ் மணிக் குவட்டின்
இமையேகேள்! இயற்கைக் கூத்தின்
அசைவெலாங் தமிழன்! உந்தன்
அறிவெலாம் கரும்புத் தூற்றல்!
புசிக்காத இளமை யேநீ
போlபோ!!போ!!! மேல்நாட் டாரின்