பக்கம்:சாவின் முத்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சாவின் முத்தம்

திசைபார்த்து நடைது வக்கி,
தொழுநோய்போல் முகத்தை மாற்று!


ஏழ்மையின் குமுறலோ நீ
கொட்டிடும் சாரல்? "மக்கள்
வாழ்ந்திடத் தானே இந்த
வையமும்; உணர்வும்" குள்ளம்
'தாழ்ந்துபோ' எனினும், வெற்பின்
தலைக்குமேல் நிமிர்ந்தாய்! ஆனால்
வீழ்ந்திட்டான் மனிதன்! குள்ளம்
வீழ்ந்தது! நீதான் வென்றாய்!


மேய்க்கின்ற ஆதிக் கத்தை
வீழ்த்திடப் 'புரட்சி' ஒன்றே
'தாய்க்குலச் சரக்கு' என்று
சொல்கிறாய் முகிலே! நானும்
ஆய்ந்துதான் பார்த்தேன். உந்தன்
அழகுவில் சண்டைக் கென்றால்
நீயென்னே உணர்ச்சி அம்பாய்ப்
பளிச்சென்று அணைத்துக் கொள்ளேன்!


நடக்கின்ற உதட்டில் ஊறும்
கல்லிசை கேட்க, முல்லை
அடுக்குள்ள கூந்தலில் வண்
டடைகிடந் தால்நீ ஒடி
வெடுக்கென்று நனைப்ப தாசொல்!
பிடிபடோம் என நினைப்பா?