பக்கம்:சாவின் முத்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

21

முறிந்திடாத் தனிப் பருவம்;
முகத்து எழில்; நல்வார்த்தை;
வரிவரியாய்ச் செப்பனிட்டு வந்தான் - தன்
வரவேற்பைத் திண்ணையிலே தந்தான்.

தாய் "படுக்கை வகை எங்கே?
சரச விலைக்கு வருமா?
காய்கிடக்கு தம்பி இங்கே பாரு - ஒரே
நறுக்கில் விலைபிடித்துக் கூறு"

என்றாள். அங்கே சிலபெண்கள்,
இலவம்பூ வாய் பிரித்து,
“பின்னியது யார் இதனை?” என்பார்-அவன்
புதுப்பார்வை வாரிவாரித் தின்பார்.

தாய்:

“பாய்விரித்துக் காட்டு தம்பி!
பஞ்சு மெத்தை கீழ்பரப்ப,
ஆய்ந்ததுவாய், மெல்லியதாய்த் தேடு-விலை
வார்த்து உருவாக்கலாம் பிற்பாடு”

பாய்க்காரன்:

"மின்னல் கிறுக்கும் சிரிப்பு
மங்கையின் கொழுந் துடலைத்
தென்றல்முட்டினும் வருத்தம் செய்யும் -
படுத்தோர்
சித்ர'உடற் சுகம்' அதனை வையும்!