பக்கம்:சாவின் முத்தம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சாவின் முத்தம்

வைத்திருக்கும் வீணையிலே
வந்து படுகின்ற இசை
மெய்த்தமிழை கத்துவதைப் போலே-
இதயம்
மெய்யறம் வளர்க்கும் விரிவாலே!

அமுதநிலை தொட்டு, மேனி
ஆண்டு வரும்போது, அவள்
குமுதம் பிடிக்கின்ற இதழ்ஏடு- காதல்
கண்டுமுதல் பார்க்கும் கிளிக்காடு!

பலன்விழுந்த காட்டெ ருமைப்
பத்தை வயிற்றைப் போல
நிலத்திலே கிடக்கும் பெரும்பாறை- அதில்
நீண்டவாய் கிழித்துக்கொள்ளும்
தேரை!

எண்ணெ யிட்டுக் கொட்டைமுத்தை
எடுத்தழகு பார்ப்பது போல்
வண்ணநிறப் பாம்புஅதைத் தேடும்-பட
வாய்விரித்து ஊர்ந்துவந்து ஆடும்!

கங்கிலே கிடந்து 'பல -
கறைகடைத்தி' ரத்த இதழ்ப்
பங்குபிரிக் கின்றசுவை வேளை! - நஞ்சு
பட்டுக்கரிந்தார் 'வஞ்சி - காளை!'

இருட்டுலகம்! விடு தலையில்
ஏறுகின்ற வாள் உலகம்!
குருத்தில் உடல் இறக்கும் தேரை! பாம்பு!
சாவின்
மொட்டுக்களித்தன பிரேதக் காம்பு!