பக்கம்:சாவின் முத்தம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

39

“இதழ்கள் எங்கே?” என்பாள் வஞ்சி
வரவு கொடுக்க எழும்பும் பாண்டியன்
இரண்டு உதடும் இரத்தினச் சீவல்!

திருநாள் செய்து திரும்பும் செங்கதிர்
வரிவரி யாகச் சிரித்து; தங்கம்,
'முத்துக் கூளம், மரகதக் குப்பை,
பதும ராகப் பட்டுடை, எல்லாம்
வையத் திற்கு வழங்கும் பரிசுகள்"
என்று தெரிந்தும், இப்படிக் கதிரை',
துன்பம் அடைத்துச் சிறையில் இட்டது
தன் குறை என்று நொந்து, மேகம்,
செம்மைச் சுவட்டில் மாறிக் கொள்ள,
ஒருதரம் நினைவைத் திருத்தி, சூட்டில்
காந்தும் நிறத்துச் சேலை உரித்து
வங்கப் பருத்தி, உடுத்து,
வானில் துள்ளி. மன் றல் கொடுத்தது!

தொய்யா உலகத்து நுணுக்கம் பெய்து
மெய்யறம் வகுத்து வாழ்ந்தமூ வேந்தரின்
சிங்க ஆதனத்துத் தமிழரசு போல;
தங்கப் புழுதி நிரவலில், செங்கதிர்
கதிர்க்கை ஊன்றி உதித்தான் கிழக்கில்!

கடலின் இடுப்புபோல் கிடந்த, இல்லத்து
மணியிருட் டரசு மாண்டது! இளமை
இறக்கை தெளித்தது! குழந்தைகள் என்னும்
நீலப் புறாக்கள் கூவின மகிழ்ந்து!
நினைப்பைக் கலைத்து, புறாவின் தொகுதியைத்