பக்கம்:சாவின் முத்தம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

3

“ஏன் இவ்வளவு நேரம்
”இழைத்தாய்?' என்று
வினவினன் அவள் தந்தை.
“அந்தி நேரம்
வெளிப் போக்கு வரத்துக்கு
ஏற்றதல்ல
மனம் சுருட்ட வேண்டுமடி
அம்மா! இன்னும்
மணம் உனக்கு ஆகவில்லை
அதற்குள், என்ன?
இனம் தேடிச் சென்றாயோ!
போடி உள்ளே!
இன்றுமுதல் கடை துவக்கக்
கூடா’ தென்று

தாய்எரிந்து மேல் விழுந்தாள்!
மலர்ப்பூங் கோதை
தரை ஊன்றும் விழியினிலே
பனி நிருத்தி
போய் அடைந்தாள் அறைவீடு.
அடுத்த வீட்டுப்
பெண் ஒன்று ஓடிவந்து
"வள்ளி அக்கா!
வேய் மூங்கில் தோள்
அணைந்து அமுதம் உண்ண
விடியலிலே வருவாராம்!
இதழில் முத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவின்_முத்தம்.pdf/9&oldid=1354346" இலிருந்து மீள்விக்கப்பட்டது