பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

“இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிசக் கொள்கை தோன்றியதிலிருந்து அங்கிருந்த பல எழுத்தாளர்கள், மாக்கியவெல்லி வல்லரசுக் கட்சியைச் சேர்ந்தவன் என்ற கூறும்படியாக அவனுடைய நூல்களுக்குப் பொருள் திரித்துக் கூறி வந்தார்கள். ஆட்சியிலிருக்கும் கூட்டத்தாரைத் திருப்திப்படுத்தி அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளையும் பதவிகளையும் பெறுவதற்காக அவர்கள் கையாண்ட முறையிது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்சிலும் இருக்கிறார்கள். இவர்கள் இத்தாலியிலும், ஜெர்மனியிலும் இருக்கும் தங்கள் கூட்டத்தாரைக் காட்டிலும் திறமை மிகுந்தவர்கள். ஆனால் ஈனத்தனத்தில் அவர்களைக் காட்டிலும் குறைந்தவர்களல்ல. அதிலும் உயர்ந்தவர்களே! இவர்களைக் கேட்டால் தங்கள் எழுத்துக்களைச் சோரம் போக விடுவதைத் தவிரத் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வழியில்லை என்று கூறுகிறார்கள் என்று கவுண்ட் சார்லோஸ்போர்கா தம்முடைய "மாக்கியவெல்லியின் உயிருள்ள சிந்தனைகள்” என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மாக்கியவெல்லியின் 400-வது பிறந்தநாளை 1869-ஆம் ஆண்டில் இத்தாலியர்கள் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். அவனுடைய சொந்த ஊரான பிளாரென்ஸ் நகரத்தில் உள்ள அவனுடைய கல்லறையின் மேல் உள்ள தகட்டில் இந்த வாசகங்கள், பொறிக்கப்பட்டுள்ளன.

  • டாண்டோ ரோமினி நுல்லும் பார் எலோஜியம்” இவ்வளவு பெரிய பெயருக்கு எந்தப் புகழும் ஈடாகாது.