பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25




இரண்டாம் பகுதி
நூல் சுருக்கம் : 1
அரசன் (The Prince)

(ந்நூலை பியேரோடி மெடிசியின் மகனான மாமன்னன் லாரென்சோவுக்கு நிக்கோலோ மாக்கியவெல்லி காணிக்கையாக்கியுள்ளான். அவன் லாரென்சோவை நோக்கி இப்படிக் கூறியுள்ளான்.)

ஓர் அரசனுடைய ஆதரவைப் பெற விரும்புகிறவர்கள், அவனுக்குப் பெரும் மதிப்பு வாய்ந்த பொருள்களையோ அல்லது அவனுக்குப் பெரிதும் இன்பம் கொடுக்கிற பொருள்களையோ வெகுமதியாகக் கொடுப்பது வழக்கமாயிருக்கிறது. என்னுடைய ராஜபக்தியின் சிறு அடையாளமாக ஏதாவது தங்களுக்கு வெகுமதி கொடுக்க வேண்டுமென்று நினைக்கும் போது, தற்கால நிகழ்ச்சிகளின் அனுபவத்திலிருந்தும், முற்கால நிகழ்ச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சியிலிருந்தும் பெரிய மனிதர்களின் செயல்களைப் பற்றிய என்னுடைய ஞானத்தைப் போல் அருமையான மேன்மையான வேறு எந்தப் பொருளும் என்னிடத்தில் கிடையாது.