பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

23

காண முடியும் என்றும் இன்பமாக வாழ்ந்திட மன நிறைவு கொள்வதில்தான் அடங்கி இருக்கிறது.

தன்னடக்கம்

உன் உடல் நலத்தையும், இயற்கையின் அருளையும், புரிந்து கொண்டு நடப்பதில்தான் இன்பமான வாழ்வை அடைவதற்கு உள்ள குறுகிய வழியாகும். அந்த அருள் உனக்கும் இருக்கிறது. அதை நீ நல்ல முறையில் பாதுகாத்து வந்தால், உன் வாழ்நாள் முழுமை வரை மகிழ்ச்சி இருக்கும்.

துறவின் இன்பத்தில் அளவிற்கு மிஞ்சி மயங்கி விடாதே. அப்படிப்பட்ட மன மயக்கம் வரும்போது எச்சரிக்கையாக விலகிவிடு. உன்னை மயக்கிட வாய்ப்பு, சூழ்நிலை ஏற்படும்போது, நமக்குத் தொல்லை நெருங்குகிறது என்பதைப் புரிந்துகொள். நீ எதையும் உறுதியாக இருந்து, உன்னைப் பாதுகாத்துக் கொள்.

எதிரிகளின் மயக்கு மொழிகளைக் கேட்டு மயங்கி விட்டால் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ள நேரிடும். உனக்கு இரண்டகம் செய்திடும் ஆற்றல்களைப் புரிந்து கொண்டு விலகி நில். நீ அதுதான் இன்பம் என்றும் தவறாக நினைத்துவிட்டால் உன்னை ஒரு பைத்தியக்காரனாக நீயே ஆக்கிக் கொள்ள வேண்டி இருக்கும்.