பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்வீறு முதிர்ந்த வீர!
தமிழாகரர் ந.ரா. முருகவேள்



சங்கநூற் பெரும்புலவ! சைவநூற்
              கலைச்செல்வ! தமிழர் போற்றும்
துங்கமிகு காப்பியங்கள் மூன்றனுக்கும்
             ஆய்வுநூல், சுருக்க நூல்கள்,
நன்குமிகத் தொகுத்தளித்து நலஞ்செய்த
             பேராசான்! நனிசிறக்க
ஐங்குறுநூற் றெழில் மிகுத்த அரும்பொருள்கள்
             விரித்துரைத்தோய்! ஐய! வாழி!

'கேட்டாரைப் பிணிப்பதுடன் கேளார்க்கும்
            வேட்கை' மிகக் கிளர்ச்சி ஊக்கம்
ஊட்டாநின் றறிவுவிருந் துதவுமுயர்
            பேச்சாள! உரன்சி றந்தோய்!
நாட்டார்ஐ யாஅவர்கள் நல்லுரையின்
            குறைநிரப்பும் நலம்செ றிந்த
ஆட்டான்நீர் ஒருவரெனின், அரியநின்
            புகழ்நலன் யாம் அளப்ப தெங்ஙன்?

எழுத்தினொடு பேச்சாலும் இனியதமிழ்,
            சிவநெறியென் றிரண்டும் எங்கும்
முழக்கிவரும் நாவலனே! முடுக்குமிகு
            தமிழ்வீறு முதிர்ந்த வீர!
ஒழுக்கநெறி இழுக்காதோய்! உரைப்புமிகு
            கொள்கையினாய்! உவந்தே யாங்கள்
அழைக்கமகிழ்ந் திவண்போந்த அதற்குநினக்கு
            எம்நன்றி அளவொன் றின்றால்!