பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.ரா


ணிக்கொடி' காலத்துக்கு மூலபுருஷர் என்பதும், பார்தியைத் தமிழகத்துக்கு எடுத்துக்காட்டியவர் என்பதும் தெரியாதனவல்ல. படைப்புத் துறையில் புதுப்புது இலக்கிய உருவங்களைத் தாமே படைத்துக் காட்டிய கலைஞன் வ.ரா.

'1889 இல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திங்களுரில் பிறந்தவரான வ. ராமசாமியிடம் எனக்கு ரொம்ப ஈடுபாடு உண்டு. அவர் எழுத்தில் பிரச்சார நோக்கம் அதிகமாக இருந்தாலும் ஒரு கவர்ச்சியும் இருந்ததை யாரும் தவிர்க்க முடியாததாக இருந்தது. மறுமலர்ச்சி இலக்கியத்திற்கு பாரதியார் எப்படி முன்னோடியோ அப்படியே வ.ராவும் ஒரு முன்னோடி என்று சொல்லவேண்டும்.’ என்று க.நா.க சொல்லுவது மிகையில்லை.

அவரின் படைப்பின் பெருமையை எழுதிய தி.க.சி அவர்கள் "வ.ரா வின் வசன நடைக்காகவும், முற்போக்குக் கருத்துக்களுக்காகவும், அவரை நான் போற்றுகிறேன். அவர் எழுதும் வசனம் அற்புதமானது. அபூர்வமானது. விறுவிறுப்பும், வேகமும், தெளிவும், ஆழமும் கொண்டது. எதையும் சுற்றி வளைத்து எழுதத் தெரியாதவர். நேராகப் பளிச்சென்று தான் விஷயத்தைச் சொல்லுவார். சொற்கள் அவர் கையில் கூரிய அம்புகள், அரசியல், சமுதாயம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றின் மேன்மைக்காக அயராது தொண்டு செய்தவர் வ.ரா." என்கிறார். -

வ.ரா வின் சிறுகதைகளைப் பற்றி அவரிடமே நண்பர் அழகாகச் சொன்னாராம், இப்படி... “கதைகள் துவக்கத்தில் வெகு விரிவாக ஆரம்பமாகின்றன. முடியும் பொழுது சட்டென்று முடிந்து போகின்றனவே”

“ஆம், உங்களுடைய அபிப்பிராயம் சரியானதே...” என்று கூறியதாக அவரது சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மையைச் சுட்டுகிறது.