பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்தாளர்கள் பற்றி முக்கியமானவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைத் தொகுத்துத் தருவதுடன் அவர் தனது எண்ணங்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய நேர்மையும் நியாயமுமானப் பார்வை அவ்வித அபிப்பிராயங்களில் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.

இத்தொகுப்பு தஞ்சையைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புத் திறமையையும், அவர்களது படைப்புக்களின் தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. அதே வேளையில், பொதுவானத் தமிழ் சிறுகதையின் வளத்தையும், வனப்பையும் பன்முகத் தன்மையும் ஓரளவுக்கு எடுத்துக்காட்டும் தொகுப்பாகவும் இருக்கிறது. இதை இலக்கிய ரசிகர்கள் வரவேற்பாளர்கள் என்று எண்ணுகிறேன்.

தமிழ் இலக்கியத்தின் வளத்துக்காக பலவகைகளிலும் பணிபுரிந்து வரும் இனிய நண்பர் சோலை சுந்தரபெருமாள் மேலும் முன்னேறிச் சிறப்புறுவதற்கு அவரது ஆர்வமும், ஆற்றலும், உழைப்பும் துணைபுரியட்டும்.

வாழ்த்துக்கள்...