பக்கம்:தாயுமானவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii 20. எம்பெருமான் திருவடியை எப்போதும் பணிந்தேத்திச் செந்தமிழில் பாட்டிசைத்துச் சேவித்த வன்றொண்டர் தம்முடைய வரலாற்றின் தகவனைத்தும் ஆய்ந்துரைத்து நம்முடைய உளங்கவர்ந்த நல்லார்க்குப் பல்லாண்டு, 21. யாருக்கும் தீங்கறியாப் பூஞ்சிரிப்பர்; தம்மறிவைப் பாருக்குத் தந்துவக்கும் பாங்காளர் பண்பாட்டின் வேருக்கு நீருற்றும் வித்தகர்தம் சத்தான சீருக்கும் பல்லாண்டு தீந்தமிழ்க்கும் பல்லாண்டு. - வாழ்த்து . 22. தற்பரன் திருத்தாள் பற்றித் தமிழமிழ் துட்டி அன்பால் அற்புதம் நிகழ்த்தி ஞாலம் . அமைதியாய் வாழ்தற் கேற்ற கற்பினைக் காத்துத் துய காதலால் இன்பம் துய்த்து நற்றவம் செய்த ஆரூர் நம்பியும் நாடும் வாழ்க. 23. அவருயர் வாழ்வு பற்றி அறிவன அனைத்தும் ஆய்ந்து தவறிலா நடையில் நல்ல தமிழினில் எழுதிக் கற்றார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/16&oldid=892153" இலிருந்து மீள்விக்கப்பட்டது