ல்லறவியல் 39 14. நல்லொழுக்கம் உடைமை ஒழுக்கமே உயர் சிறப்பு அளிப்பதால், அவ்வொழுக் த்தை உயிரினும் உயர்ந்ததாகப் போற்ற வேண்டும். 131 ஒழுக்கத்தைப் பாடுபட்டுப் பேணிக் காப்பீராக! எப்படி ஆய்ந்து போற்றித் தேர்ந்து நோக்கினும் அவ்வொழுக்கமே உயிர்க்கு நற்றுணை. 1 32 ஒழுக்கம் உடைமையே உயர்குடிப் பிறப்பின் இயல்பாகும். இழுக்கமோ (ஒழுக்கம் இன்மையோ) இழிகுடிப் பிறப்பின் இயல்பே யாகும். 133 மறையை (வேதத்தை) மறந்தாலும் மறுபடியும் படித்துக் கொள்ளலாம்; ஆனால் மறையோதும் பார்ப்பனனது குடிப்பிறப்பு ஒழுக்கம் குன்றினால் கெட்டு விடும். 1. 34 பொறாமை யுடையவனிடத்தில் வளர்ச்சி இல்லாதது போல் ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இராது. 1 35 திண்ணிய அறிவாளிகள் ஒழுக்கக் கேட்டால் குற்றம் விளைவதறிந்து நல்லொழுக்கத்தினின்றும் தளராது நிற்பர்.
- , 1. 36
எவரும் ஒழுக்கத்தால் உயர்புகழ் அடைவர்; இழுக்கத்தாலோ அடையக் கூடாத பழியை அடைவர். 137 நல்லொழுக்கம் நன்மை விளைவதற்கு இட்ட விதையாகும் தீ யொழுக்கமோ என்றென்றும் துன்பமே விளைக்கும். 1 38 தீய சொற்களைத் தவறியும் தம் வாயாற் பேசுதல் நல்லொழுக்கம் உடையோர்க்கு இயலாது. 1 39 பல கலைகள் கற்றிருப்பினும் உலகத்தோடு ஒட்டி நடத்தலைக் கல்லாதவர்கள் அறிவில்லாதவர்களே. 140