பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vii

செய்ததுடன் படிகளைத் திருத்தும் பணியையும் மேற்கொண்ட முனைவர். மா. ரா. போ. குருசாமி, இதய மருத்துவ நிபுணர் டாக்டர். ந. சிவராசன், இரயில்வேயில் மின்னியல் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற திரு. C. P. கெளரிசங்கர், திரு. ச. மார்க்கண்டு ஆகிய இந் நால்வர்க்கும் என் நல்வாழ்த்துக்கள் உரியன.

இவர்கள் நால்வரும் என்மாட்டுக்கொண்ட அன்பினால் இதனைச் செய்தார்கள் என்று கூறுவதைவிட திருவாசகத்தின்பால் அவர்கள் கொண்டுள்ள எல்லையற்ற ஈடுபாடே இதனைச் செய்யுமாறு துண்டிற்று என்பதே உண்மையாகும்.

வழக்கம்போல இதனை நன்முறையில் அச்சுக்கோத்துத் தந்த 'சிவசக்தி கணினி அச்சுக்கோப்பாளர்'களுக்கும் என் நல்வாழ்த்துக்கள் உரியன.

சிறப்பாக நூலை வெளியிட்ட 'கங்கை புத்தக நிலைய' உரிமையாளர் திரு. திருநாவு. இராமநாதன் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் உரியன.

அ.ச.ஞானசம்பந்தன்

சென்னை-83
டிசம்பர், 1999