பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பெரிய புராணத்தைப் பரப்புவதையே தம் வாழ்நாட் பணியாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருஞ்சொல் விளக்கனார் அறிஞர் அ.மு. சரவண முதலியார் அவர்களின் ஒரே மகனார் என்ற முறையில் பேராசிரியர் அ. ச. ஞா. அவர் கள் பெரியபுராணத்தை ஆய்வு செய்து இரண்டு அரிய நூல் களைப் படைத்துள்ளார். தேசிய இலக்கியம், பெரிய புராணம் ஓர் ஆய்வு-இவ்விரண்டுமே இரண்டு மாணிக்கங்கள் தமிழ்ர்கள் இவற்றைப் போற்றிப் படித்துப் பயன்பெறவேண்டும்.

தேசிய இலக்கியம் எனும் இந்நூலைக் கழக வழி வெளியிட வாய்ப்பளித்த பேராசான் அவர்கட்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

-சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்