பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


தொழில் ஆர்வமோ பெற்ற நகராக இருக்கவில்லை என்பது தான் குறிப்பிடத் தக்க நிலையாகும்.

அத்தகைய நேரத்தில் ஒரு தனி மனிதர் துணிவாக எண்ணற்றத் தொழிற்சாலைகளை உருவாக்க, இயக்க, காரணராக இருந்தார் என்பதே பாராட்டுக்குரிய சம்பவமாகும்.

இவ்வளவையும் நாயுடு ஏன் கோவையில் செய்தார்? தமிழ் இனம், தமிழ்ச் சமுதாயம் தொழில் துறையில் மேல் நாடுகளுக்குச் சமமாக வாழ்ந்து வளம் பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தால் தானே!

இதே ஜி.டி. நாயுடு உலக நாடுகளில் எங்கோ ஓரிடத்தில் பிறந்து தொழிற்சாலைகளை உருவாக்கி இருந்தால், அறிவுடையார் எங்கிருந்தாலும் பாராட்டத் தக்கவர்களே என்ற தத்துவச் சிறப்பிற் ஏற்ப, நோபல் பரிசுகள் தேடி வந்து அவரிடம் அடிமையாகி இருக்குமா - இருக்காதா என்பதை நாம் தான் சிந்திக்க வேண்டும். அந்த நிலை நாயுடுவுக்கு ஏன் உருவாகவில்லை?

அறிவுக் கேற்ற தகுதியை
அவர் பெறாதது ஏன்?

தமிழ் நாட்டு மக்களிடத்தில், ஏன் இந்திய மக்களிடத்தில், அந்தக் காலக் கட்டத்தில் தொழில் அறிவு அதிகம் இல்லாமல் இருந்ததுதான் காரணமோ அல்லது, தொழிற் புரட்சியற்ற மண்ணில் அவர் எண்ணற்ற தொழில் நுட்பங்களைத் தொழிற்சாலைகளாக்கிக் கொட்டிக் குவித்ததால் தானோ புரியவில்லை நமக்கு!

ஜி.டி. நாயுடு வாழ்ந்த கால கட்டத்தில் அவரால் துவக்கப் பட்ட தொழிலகங்கள், இப்போது ஆரம்பிக்கப் பட்டிருக்குமானால், இக் கால அரசியல்வாதிகள், தொழிலறிஞர்கள், தொழில் நுட்ப வரவேற்புகள் அவரைத் தேடி நாடி ஓடி வந்து பட்டம் பதவிகளை வலிய வலிய வழங்கி, ஒஹோ. என்று போற்றித் திரு அகவல்களைப் பாடிப் புகழ்ந்திருக்குமோ - என்னவோ, காலம்தான் கணக்கிட வேண்டும் பராபரமே!

ஜி.டி. நாயுடு அவர்கள், அப்படி என்னென்ன தொழிற்சாலைகளைத் தோற்றுவித்து விட்டார் என்று எவராவது கேட்பார்களேயானால் - அவர்களுக்கு இதோ சில தக்கச் சான்றுகள்.