பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



கல்வி அறிவு அற்றக் காலத்தில் அவர் தொழில் துறையில் புகுந்தார். ஒரே ஒரு பேருந்தை விலைக்கு வாங்கிய அவர், தானே முதலாளி, தானே தொழிலாளி, எல்லாம் தானே என்று அயராது அரும்பாடு பட்டு, தனது பேருந்துவுக்குப் புகழ்தேடி, யு.எம்.எஸ். என்ற 200 பேருந்துகளின் கூட்டுறவு அமைப்பை உருவாக்கி, மக்கள் மதிக்குமளவுக்குச் செல்வாக்குப் பெற்று. செல்வச் சீமானாகி, புகழ் துறையை தனக்கு அடிமையாக்கிக் கொண்டார்.

திருக்குறள் மறைக்கு
நாயுடு எடுத்துக் காட்டு!

மேல் நாடு சென்று, தொழிலியல் மாணவராகக் கல்வி கற்று, ஓய்வு நேரங்களில் தமிழ், ஆங்கில மொழிகள் அறிவைப் பெற்று, உலகை எழு முறை வலம் வந்து, ஈடில தொழிலியல் துறை விஞ்ஞானியாக வர் விளங்கினார். “ரேசண்ட் பிளேடு” விஞ்ஞானத்தால், பிரிட்டிஷ், அமெரிக்க விஞ்ஞானம் இன்றுவரை அவரிடம் தோற்று விட்டது.

ஈதல்லவோ பிறர் அறியுமாறு அறிமுகமான புகழ் அறிமுகம்? இதை விடுத்து. திரு. ஜி.டி.நாயுடு உலகு காணக் காட்சி தருபவராக விளங்க வில்லையே! அது புகழ் ஆகாதே - என்றுணர்தற்குச் சான்றாகத் தானே உலகுக்கு அவர் அறிமுகம் ஆனார்!

எனவே, மக்களாய்ப் பிறக்கும் யாரும் - புகழ் உண்டாவதற்கான குணங்களோடு பிறக்க இயலாது. பிறந்த பின்பு சேரும் குணங்கள், சுபாவங்கள், மன வளங்கள், கல்வியின் வித்தகங்கள், அனுபவ ஆற்றல்கள், வளர்நிலை சூழல்கள்தான் ஒருவனைப் புகழ் ஏணியில் ஏற்றுமே தவிர, பிறக்கும் போதே புகழ்க் குணங்களோடு பிறத்தல் என்பது இயலாதல்லவா?

எனவே, திரு. சாலமன் பாப்பையா கூறும் குழப்பமற்ற, முன் ஜென்மம் - பின் பிறப்பற்ற, தெளிவான உரையாகும். அதற்கு எடுத்துக் காட்டாகவே திரு. ஜி.டி. நாயுடு அவர்களது புகழ் இன்றும் திகழ்கின்றது எனலாம்.

இத்தகைய புகழேணியின் சிகரத்திலே நின்ற திரு. ஜி.டி.நாயுடு அவர்கள், தொழிலியல் விஞ்ஞானியாக மட்டுமே