பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



இந்த எடை சோதனையை எதற்காகச் செய்கிறார். ஜி. டி. நாயுடு என்று கேட்கிறீர்களா? வேறொன்றுக்கும் இல்லை. எல்லாம் ஒழுக்கத்தை ஒழுங்காகக் காப்பாற்றுவதற்குத்தான்! என்ன புரிந்ததா?

உடல் எடை சோதனை போடப்பட்ட மாணவர்களில் யாருக்காவது ஒரு வாரத்தில் 5 பவுண்டு எடை காரணமில்லாமல் குறைந்தால், அந்த மாணவனுக்கும், அதே போல, எந்த வேலைக்காரனுக்காவது ஒரு வாரத்தில் 5 பவுண்டு எடை அதிகரித்திருக்குமானால் இந்த இரண்டு பேரும் உணவு விடுதியை விட்டு நீக்கப்பட்டு விடுவார்கள்.

விஞ்ஞானி சர். சி. வி.
இராமன் பேசுகிறார்!

கோபால் பாக்கில் படிக்க வரும் பொறியியல் மாணவர்களை ஜி. டி. நாயுடு இவ்வளவு கடுமையான விதிமுறைகளால் பாதுகாத்து வரும்.போக்கைக் கண்ட விஞ்ஞானி சர். சி. வி.ராமன், 9.6.1951- அன்று நடைபெற்ற மாணவர்களது பரிசளிப்பு விழாவில் பேசும்போது:

அருமை மாணவர்களே! நாயுடு அவர்கள் உங்களிடத்தில் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கண்டிப்பாக அமல் நடத்துகிறார். தவறான வழியில் நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குகிறார். அதன் மூலம் அவர் உங்களுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.

அந்தப் பாடமும், பயிற்சியும் இங்கே படிக்கும் ஆண்டுகள் வரைக்கும் மட்டும்தான் பயன்படும் என்று நினைக்காதீர்கள். உங்களுடைய வாழ்நாள் முழுவதுக்குமே பயன்படும் ஒழுக்கப் போதனையாகும்.

இன்று நாங்கள் கையெழுத்திட்டு உங்களுக்குத் தருகின்ற இந்த பட்டயத்தையும், நற்சான்றிதழையும் விட,நீங்கள் இங்கே பெற்றுக் கொண்ட ஒழுக்க விதி முறைப் பேனல்கள் பேராற்றலும்-பெருமதிப்பும் வாய்ந்ததாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.