பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

145



நீரிழிவுக்கு
மருந்து!

நானும் எனது நண்பரும் நீரிழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஆரம்பித்தோம். ஏறக்குறைய 150 மூலிகைகளை அதற்காகப் பரிசோதனை செய்தோம். அவற்றில் சில மூலிகைகள் பக்க விளைவுகளும், ஆபத்தும் இல்லாதவைகள் என்பதை அறிந்தோம்.

ஆபத்தற்ற அந்த மூலிகைகளைத் தேர்ந்தெடுத்து மருந்து தயாரித்தோம். அந்த மருந்தை நோயாளிக்குக் கொடுப்பதற்கு முன்னர், டாக்டர் வி.பி.பி.நாயுடும்,நானும்,மற்றும் இரு நண்பர்களு மாகச் சேர்ந்து நாங்கள் நால்வரும் அதனை உண்டோம்.

அப்போது எங்களுக்கு எந்தவிதமான ஒரு நோயும் உடலில் இல்லை. இருந்தும் நாங்கள் தயாரித்த மருந்தை உட்கொண்டோம்.

அதனால் எங்களுக்கு ஆபத்துகள் ஏதும் உண்டாகவில்லை அதற்கு மாறாக எங்களது உடல் நிலை சற்று வளமாகவே மாறியது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த மருந்தை இரண்டு நோயாளிகளுக்குக் கொடுத்தோம். அவர்களுக்கு இருந்த வியாதி குணமானது.

சிறிது நாட்கள் சென்றன. வேறு இரு நோயளிைகளுக்கு அதே மருந்தைக் கொடுத்தோம். என்ன ஆயிற்று தெரியுமா? எந்த வித பலனும் இல்லை. இதைக் கண்ட நாங்கள், மறுபடியும் ஆராய்ச்சியைத் துவக்கினோம். எதனால் அந்த இருநோயாளிகளுக்கு அந்த மருந்தால் பலன் இல்லாமல் போயிற்று என்பதை அறிவதில் ஈடுபட்டோம்.

அந்த மருந்தில் சேர்ந்துள்ள ஒரு முக்கியமான மூலிகைக்கு, மார்ச்சு, ஏப்ரல், மே என்ற மூன்று மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் அந்த மருந்துக்கு வளமான சத்து அமைவதில்லை என்ற உண்மை தெரிந்தது. குறிப்பாக, நவம்பர் மாதத்தில் அந்த மருந்து தனக்குரிய மருந்துச் சக்தியையே இழந்து விடுகின்றது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

ஆனால், சந்தன மரம்போன்ற சில குறிப்பிட்ட மரங்களுக்கு அருகே அந்த மூலிகைச் செடியை நட்டால், அளவிலும் - குணத்தி