பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


லும் மிக அதிகமான பலனை அது வழங்குகிறது என்பதையும் உணர்ந்தோம்.

அந்த மூலிகையை மண்ணிலே இருந்து பிடுங்கிய இருபத்தெட்டரை மணிநேரத்துக்குள் மருந்தைச் செய்து விட வேண்டும். இல்லை என்றால் அந்த மூலிகையிலிருந்த சத்து மறைந்து விடுகின்றது என்பதையும் அறிந்தோம்.

நாங்கள் இவ்வாறு செய்த ஆராய்ச்சிகளால், நீரிழிவு நோய்க்குரிய ஓர் அருமையான மருந்தைக் கண்டு பிடித்தோம். அந்த மருந்திற்கு 'டயடயடிக் தூள்' DIE-DIETIC POWDER என்று பெயரிட்டோம்.

அந்தப் பவுடரைப் பயன்படுத்தினால் 5 வாரத்திலிருந்து 6 மாதத்திற்குள் நீரிழிவு வியாதி முழுமையாகக் குணமாகி விடுகின்றது. உலகம் முழுவதுமுள்ள நீரிழிவு நோயாளர்கள், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், இந்தியா, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நீரிழிவு நோயாளர்கள் குணமடைந்துள்ளார்கள். அந்த நாடுகளில் எங்கள் மருந்துக்கு நல்ல வரவேற்பும் இருக்கின்றது.

வெட்டை எனும்
நோய்க்கு மருந்து!

நீரிழிவு நோய்க்கு நாங்கள் கண்டு பிடித்த முதல் சித்த மருந்து வெற்றியை ஈட்டியதால், அடுத்து வெட்டை LEUCORRHEA எனப்படும் நோய்க்கும் மருந்து கண்டு பிடிக்கும் மகிழச்சியிலே இறங்கினோம்.

இந்த வெட்டை நோய்க்காக, அதன் தன்மைகளை அறிந்திட, மூவாயிரம் வெட்டை நோயாளர்களைத் தேடிக் கண்டு பிடித்துச் சோதனையில் ஈடுபட்டோம். அந்த வியாதி உலகத்திலுள்ள பெண்களை எவ்வாறு பாதிக்கின்றது என்ற கணக்கு விகிதம் கிடைத்தது. அது இது:

ஜப்பான் 40 சதவிகிதம்
ஜெர்மன் 40 சதவிகிதம்
அமெரிக்கா 45 சதவிகிதம்
இங்கிலாந்து 48 சதவிகிதம்
இந்தியா 55 சதவிகிதம்