பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



கல்வி என்பது மாணவர்களுக்கு உதவவும், மனித இனத்துக்கு நன்மை பயக்கவும் ஏற்பட்ட ஒரு சாதனமாகும். மாணவர் கள் கல்விக்காகவே இருக்கிறார்கள் என்று எண்ணக் கூடாது.

கல்வி என்பது மாணவர்களுக்கு ஓர் ஊன்றுகோல் ஆகும். புத்தகங்களிலிருந்தும், சொற்பொழிவுகளிலிருந்தும் நீங்கள் பெறும் அறிவும், தேர்வுகளில் வாங்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், இறுதியில் நீங்கள் பெறும் பட்டமும் உண்மையான கல்வி ஆகாது.

இவையெல்லாம் உங்களது வாழ்க்கை எனும் கல்விக்குரிய வளர்ச்சிப் படிகளாகும். இங்கே நீங்கள் கடமை உணர்ச்சியோடு சிறந்த பயிற்சி பெற வேண்டும். உங்கள் சக்திகளை வீணாக்கக் கூடாது; வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தங்களது பண்புகளை நல்ல அடிப்படையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு நீங்கள் பணியாட்கள் (Servants) என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். தவறுவீர்களேயானால் நீங்கள் பல உண்மைகளைக் கற்றுக் கொள்ள இயலாமல் போய்விடும்.

நான் ஒரு கொள்கையை உறுதியாகக் கொண்டிருக்கிறேன். அதாவது, நமது வாழ்வின் முதல் 25 ஆண்டுகள் கல்வியும் பயிற்சியும் பெற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் அவற்றைப் பயன்படுத்திப் பொருள் சம்பாதிக்க வேண்டும். இறுதி 25 ஆண்டுகளில் ஈட்டிய பொருளை நல்ல வழிகளில் செலவு செய்து புகழ் அடைய வேண்டும். இந்தக் கொள்கைகளை மாணவர்களும் கடைபிடித்தால் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நமது உடலையும், மனத்தையும் கெடுக்கக்கூடிய பல பொருட்கள். இப்பொழுது உலகில் இருக்கின்றன. உதாரணமாக, உணவை எடுத்துக் கொள்ளுங்கள். பொருந்தாத உணவை உண்பதால், உடலும், அதனால் மனமும் கேடு அடைகின்றன.

மக்களில் சிலர் கோபத்துடனும், வேறு சிலர் நல்ல பண்புடனும், மற்றும் சிலர் சூழ்ச்சி மனப்பான்மையுடனும், அடுத்த சிலர் மனேதிடத்திடனும், வேறு சிலர் நோய்வாய்ப்பட்டும் வாழ்கின்றதைப் பார்க்கின்றோம்.