பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


தொழிற் கல்வியை உருவாக்க வேண்டும், உடைத்தெறிவதால் பயனில்லை என்று உணர்ந்தார்.

அதே கலைக் கல்லூரி கட்டடங்களில் தொழிற் கல்வியைப் புகுத்தினார். அவ்வாறு புகுத்தப்பட்டக் கல்லூரிகளில், சென்னை பச்சையப்பர் கல்லூரியும், இராமகிருஷ்ணர் கல்வி நிலையமும், ஆந்திரப் பல்கலைக் கழகமும் ஆகும். அவற்றுக்குள் தொழிற் கல்வியைப் புகுத்த ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கினார் நாயுடு.

தன்னிடம் இருந்த பேருந்துகளில் சிலவற்றை உயர்நிலைப் பள்ளிகளுக்கு இனாமாகக் கொடுத்தார் நாயுடு. இலட்சுமி நாயக்கன் பாளையத்தில் 1943-ஆம் ஆண்டில் ஓர் உயர்நிலைப் பள்ளியை உருவாக்கினார்.

1943-ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, சென்னை மாகாணக் கவர்னராக இருந்த சர். ஹார்தர் ஹோப் அவர்களிடம்; போர் நன்கொடையாக ஓர் இலட்சத்து பத்தாயிரம் ரூபாயை வழங்கி, போரில் ஈடுபட்ட உயிர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு நாயுடு அவர்கள் கவர்னிடம் கேட்டுக் கொண்டார்.

அதே நோக்கத்திற்காக, திரு. நாயுடு அவர்கள், போர்க் கடன் பத்திரங்களுக்கும் பத்து இலட்சம் ரூபாயைக் கொடுத்தார்.

முதன் முதல் ஜி.டி. நாயுடு அவர்களால் யு.எம்.எஸ். மோட்டார் சர்விஸ் துவக்கப்பட்டதல்லவா? அந்த நிறுவனத்தில் பணியாற்றிடும் தொழிலாளர் துன்பங்களை, இன்னல்களைப் போக்கி, நல்வாழ்வு பெற்றிடுவதற்காக ஒன்னரை இலட்சம் ரூபாயை சங்க நிதியாக வழங்கியவர் ஜி.டி. நாயுடு அவர்கள்.

சென்னை மாகாணத் தொழிலாளர் சங்க நல வளர்ச்சிக்காக ஓர் இலட்சம் ரூபாயை அவர் நிதியாகக் கொடுத்தார்.

தனது நிருவாகத்தில் ஒன்றாக விளங்கிய ரேடியோ - மோட்டார் தொழில் வளர்ச்சிக்காக இரண்டு இலட்சம் ரூபாயை நிதியாக வழங்கியவர் நாயுடு அவர்கள்.