பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

179



அதற்குப் பெரியார், எனக்கெதற்கு முதல் வகுப்புப் பெட்டி? மூன்றாம் வகுப்பில் ஏறி வந்த பணம் போக; மீதி காசு கட்சித் தொண்டுக்குப் பயன்படாதா? என்ற அக்கரைதான் - என்ற காரணத்தைக் கூறி, பெரியார் அன்று நாயுடுவிடம் இருந்து தப்பித்துக் கொண்டார்.

1924-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் கோவை மாநகரில், ஒய்.எம்.சி.ஏ. சார்பாக நடைபெறும் கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக கோவை நகர் வந்தார்.

அந்த நேரம், தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கின்ற நெருக்கடியான நேரம், தீபாவளி விழா வந்தால் ஜி.டி. நாயுடு அவர்கள், கண்ணம்பாளையம் மல் வேட்டிகளைத் தான் வாங்குவது வழக்கம். அந்த வேட்டி கோயம்புத்தூர் மக்கள் இடையே அவ்வளவு புகழ் பெற்றதாக அப்போது விளங்கி இருந்ததால், அந்த ஊர் மில் வேட்டிகள் தானா என்று மக்கள் பார்த்து வாங்குவார்கள்.

தந்தை பெரியார் அப்போது இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் பேரவைத் தலைவராக இருந்தார். அவர் கதர் துணிகளை, அதுவும் கைராட்டையில் நூற்ற நூல்களைக் கொண்டு நெய்யப்பட்ட கதராடைகளைத்தான் அணிவார். காங்கிரஸ்காரர்கள் எல்லாருமே அத்தகைய கதர் துணிகளை அணிவதையே கொள்கையாகக் கொண்டிருந்தார்கள்.

தீபாவளி நேரமல்லவா? தந்தை பெரியார் கோவை நகர் கண் காட்சியைத் திறந்து வைக்கவும், விழா முடிந்ததும் தீபாவளி விழாவுக் கான கதராடைகளை, வேட்டிகளை வாங்கவும் எண்ணினார்.

தொழிலதிபர் ஜி.டி. நாயுடுவும் - தந்தை பெரியாரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில், இருவருக்கும் பேச்சுவாக்கில் ஒரு போட்டி எழுந்தது. அதாவது, மில் வேட்டி சிறந்ததா? கதர் சிறந்ததா? என்பதைப் பற்றி நாம் விவாதம் செய்ய வேண்டும் என்று திரு. ஜி.டி. நாயுடு பெரியாரைக் கேட்டுக் கொண்டார்.

'என்ன நாயுடு பந்தயம்?' என்றார் பெரியார் நாயுடுவிடம். அதற்கு நாயுடு, ' நான் உமது வாதத்தில் தோற்றால், கதர் கட்டிக்