பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



அதனால், பயணிகள் நாளுக்கு நாள் யு.எம்.எஸ். நிறுவனத்தின் பேருந்துகளிலே பயணம் செய்வதையே பெரிதும் விரும்பினார்கள் என்பது குறிப்பிடத் தக்க சம்பவமாகும். அப்படி எவராவது பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டாலும் சரி, பணியாட்கள் அதைப் பொருட்படுத்தாமல் பொறுப்போடும், பணிவோடும் நடந்து கொள்ள வேண்டியது பணியாளர் கடமை என்று சுற்றறிக்கையையும் விடுத்துள்ளார் நாயுடு அவர்கள்.

தமது சுற்றறிக்கையின்படி பணியாட்கள் நடந்து கொள்ளுகின்றனரா என்பதை நாயுடு மேற்பார்வையிடுவார். மாறு வேடங்களில் அவரே அடிக்கடி பேருந்துகளில் செல்வதுடன், எந்த ஒரு பணியாளராவது தனது அறிக்கையை மீறிப் பயணிகளிடம் நடந்து கொள்வதை அவர் நேரிடையாகக் கண்டுவிட்டால், உடனே அந்தப் பணியாளரை வேலையை விட்டு நீக்கிவிடும் அளவுக்கு அவரது கண்காணிப்பு முறை இருந்து வந்தது.

மாறுவேடத்தில் சென்று
ஊழியர்களிடம் சோதனை!

ஒரு முறை திரு.நாயுடு தனக்குத் தெரிந்த ஒருவரை அழைத்து, பேருந்து நடத்துனரைக் கன்னத்தில் அறையுமாறு கூறினார். அந்த ஆளும் நடத்துனரை ஓங்கி ஒர் அறை கொடுத்தார். அந்த நடத்துனர் சண்டையோ சச்சரவோ போடாமல், எந்த விதக் கேள்விகளையும் எழுப்பாமல், பேருந்துப் பயணிகள் எதிரிலேயே தனது நிறுவன விதிகளுக்கு ஏற்றவாறு மிகப் பணிவாக நடந்து கொண்டதை மாறு வேடத்தில் இருந்த ஜி.டி.நாயுடு பார்த்தார்.

இந்தக் காட்சியைக் கண்ட நாயுடு மறுநாள் அவரை அழைத்துப் பாராட்டி, ஊதிய உயர்வையும் வழங்கினார். இந்தச் செய்தி மற்ற நிறுவனர்களிடமும் பரவியது. அதைக் கண்ட ஊழியர்கள்: நிறுவன சுற்றறிக்கையை மிகுந்த பணிவுடனும், பய பக்தியுடனும் பின்பற்றலானார்கள். அந்த நிறுவனப் பணியாளர்களது ஒழுங்கு முறைகளால் U.M.S. நிறுவனம் மக்களிடம் மேலும் மரியாதையும், மதிப்பும் பெற்று வளர்ந்து முன்னேறியது.

இவ்வாறு ஜி.டி. நாயுடு நடந்து கொண்டதுமட்டுமல்லாமல், திறமையான பணியாளர்களை அழைத்து நேரிடையாகப்