பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

91



இந்த ஒளி சமனக் கருவியினால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? புகைப்படம் எடுக்கும் கேமரா கருவியில், சாதாரணமாக - தற்போதுள்ளபடி ஒரு பொருளைத் துரத்தில் இருந்து படம் எடுத்தால், அது படச் சுருளில் சிறிய அளவில்தான் பதிகின்றது.

ஏற்றத் தாழ்வு ஏற்படா
ஒளி சமனக் கருவி

ஆனால், அதைக் கண்ணாடிக்குப் பக்கத்தில் வைத்துப் பார்த்தால், எடுக்கப்பட்ட பொருளின் உருவம் திரையில் விழும் போது பெரியதாகத் தெரிகின்றது. இது போன்ற ஏற்றத் தாழ்வுகள் ஏற்படக் கூடாது எனும் வகையில், ஒரே மாதிரியாக இருக்கச் செய்வதற்குத்தான் ஜி.டி.நாயுடு இந்த ‘ஒளி சமனக் கருவி’யைக் கண்டுபிடித்தார். இக் கருவி மூலம் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படா.

சாலைகளில் பேருந்துகள் ஓடும்போது, பேருந்துகளின் அதிர்ச்சியைச் சோதிக்க முடியும். அதற்கான ஓர் இயந்திரம்தான் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்துள்ள அதிர்ச்சியைச் சோதிக்கும் கருவி. அதாவது, Vibrat Testing Machine ஆகும்.

இவைகளோடு இராமல், ஷேவிங் பிளேடுகளைத் தயாரிப் பதற்கான இயந்திரம், கனி வகைகளைச் சாறாகப் பிரிக்கும் கருவி, இரும்புச் சட்டங்களில் உள்ள நுண்ணிய வெடிப்புகளைக் கண்டுபிடிக்கும் கருவி, அதாவது Magro Plux Testing Unit, கணக்குப் போடும் கருவி calculating Machine, தொலை தூரப் பார்வைக்கான கண்ணாடி – Lence, குளிர்பதனக் கருவி - Refrigerator, ஒலிப் பதிவுக் கருவி Recording Machine, வானொலிக் கடிகாரம் - Radio Clock, காஃபி கலக்கி வழங்கும் கருவி, பணம் போட்டால் தானே பாடும் கருவி - Slot Singing Machine, பேருந்துகள் நிலையத்திற்கு வருகின்ற - புறப்படுகின்ற காலத்தைக் காட்டும் கருவி, துணிகளைச் சலவை செய்யும் கருவி, மாவு அரைக்கும் கிரைண்டர்கள், வானொலிப் பெட்டி போன்ற கணக்கற்ற பல கருவிகளை, மக்களது அன்றாட வாழ்க்கைக்கும், குடும்பங்களுக்கும் பயன் படக் கூடிய வகையில் ஜி.டி.நாயுடு அவர்கள் கண்டுபிடித்து இருக்கின்றார்.