பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நாலடியார் செய்யுளும் செய்திகளும்




4. நல்லன செய்க
(அறன் வலியுறுத்தல்)

“அடுத்த வீட்டு அம்புஜைத்தைப் பார்த்தீர்களா? என்று அங்கலாய்க்கிறாள் இந்த வீட்டுப் பங்கஜம்; அதற்கு அவள் அகமுடையான் சொல்கிறான். “அவள் வீட்டுக்காரர் இரவும் பகலும் உழைக்கிறார்; அதனால் தழைக்கிறாள்; பொறாமைப்படாது நாமும் உழைப்போம்; உயர்வோம்” என்று உறுதி கூறுகிறான். அறமே ஆக்கம் தரும்;

“உழைப்பவர் எப்படியும் முன்னுக்கு வருவர்; இது நியதி; இன்று பெருமையுடன் வாழ்பவர் எல்லாரும் ஒருமையுடன் உழைத்து உயர்ந்தவர்தான். அதனை அறிதல் நலம்” என்கிறான். அதனைக்கண்டு அழுக்காறு கொள்வதில் விழுக்காடு இல்லை; உழைக்காமல் யாரும் முன்னுக்கு வருதல் இல்லை.

நல்ல தொழில்; அவர் வீடு மிக்க எழில்; அவர் சுற்றித்திரிவது பொழில்; பொழுது கழிவது நறுநிழல்; அவர் மட்டும் உண்டு தின்று மகிழ்கின்றார்; மற்றவர்களைப் பற்றிக் கண்டுகொள்வதே இல்லை. என்றைக்குத் தான் கதவைத் திறக்கப்போகிறான்; காற்று வெளிசச்சம் பார்க்கப்போகிறான்; ஈனக்குரல் அவனைச்சுற்றி எழுந்தும் ‘அவர்களுக்கு உதவவேண்டும்’, என்ற ஞானவெறி அவனுக்கு ஏன் தோன்றவில்லை? கடந்த நாள்கள் போய்விட்டன; போவன போகட்டும்; இனிச் சிந்தனை செய்து, நல்லறம் உந்துதல் செய்வானாக! நானிலம் செழிக்க! அனைவரும் உழைக்க! உலகம் தழைக்க!