பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


பெயர் தரவில்லை; நாளும் புதிய படைப்புகள்; வழி இல்லை துடைப்புகள்; அவை இன்று நடப்புகள்; அடங்கி இரு ஆரவாரம் ஏன்? செயல்களைக் குறைத்துக் கொள்; தூக்கம் இழக்கிறாய்; காரணம் பற்றுகள் உன்னைப் பிய்த்துத் தின்னுகின்றன. மற்று இனிச் செய்வது யாது? பகுத்து உண்க; பல்லுயிர் ஓம்புக; காசு இருக்கும்போது வேசிபோல் பற்றிக் கொள்ளாதே. ஆசு நீங்கி அருளுக; மாசு நீங்கி வாழ்க, ஈத்துப் புகழ் பெறுக.”

“நெருப்பிலும் தூங்க முடியும்; நிரப்பினுள் கண்படுத்தல் இயலாது” என்பது வள்ளுவர் வாக்கு; வறுமை ஒருவனை நடுங்க வைக்கும்; நிம்மதியாக இருக்க விடாது; அதனால் வறியவர் வேறு அரண் இன்றி இவனைச் சரண் அடைகின்றனர். இங்கே கொட்டியா வைத்திருக்கிறது?’ என்று கெட்டியாகக் கூறி மறுத்து விடுகிறான்; அவர்களைத் துரத்தியும் விடுகிறான். போகின்றவன் மனம் வேகின்றான். “எத்தனை நாளைக்கு உன் வாழ்வு? நீயும் ஒரு நாளைக்கு நடுத்தெருவுக்கு வராமல் இருக்கப் போவதில்லை” என்று சாபம் கொடுக்கிறான்; பாபம் அவன் எரிச்சல் வயிறு.

கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது; பிறர்க்கும் கொடுத்துத் தானும் உண்டால் செல்வம் செழிக்கும்; அவன் புகழ் கொழிக்கும்; தீமைகள் அழியும், துன்பங்கள் ஒழியும். “நீ இறுகிப் பிடித்தாலும் பணம் உன்னை விட்டுப்போகாமல் இருக்காது; கெட்ட காலம் வந்தால் அஃது உனக்கு விடுதலை தந்து கெடுதலை விளைவிக்கும். ஆக்கமும் அழிவும் வினைப் பகுதியின் செயல்கள்; இவ்வுண்மை அறிக; வறியவர்க்கு ஈக; அதோ நடுத்தெருவுக்கு வந்து ‘நாராயணா’ என்று