பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

கையைத் தன் வாயருகிலே கொண்டுவந்து மிகச் சிரமப்பட்டு ஒர் அன்பு முத்தம் கொடுத்து விட்டான்.

"என் மூக்கு மிக நீளமாயிருக்கிறது என்பது உண்மைதான்!”

இந்த வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட உடனே அந்தப் பளிங்கு மண்டபம் துண்டு துண்டாய்த் தூள் தூளாய் இடிந்து விழுந்தது. வசந்த குமாரியின் பக்கத்தில் கிழத் தேவதை வந்து நின்றாள்.

"நெடுமாறா அதை மட்டுமல்ல, நீ எனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறாய் என்பதையும் நீ ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உன்னுடைய நன்மைக்காக நான் எவ்வளவு பாடுபட்டேன் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். உன் மூக்கைப் பற்றி நான் எவ்வளவு பேசினாலும் நீ அதை உணரமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். உன் விருப்பத்திற்குத் தடையாக இருந்தால் ஒழிய அந்த மூக்கின் குறையை நீ உணரமாட்டாய் என்பது என் மனதிற்பட்டது. அதனால்தான் இந்த ஏற்பாடு செய்தேன். நம் உடலையும் உள்ளத்தையும் பொறுத்தவரையில் நம்மிடமுள்ள அவலட்சணத்தை நம் அகங்காரம் மறைத்துக் காட்டுகிறது. அதனால் நாம் ஏமாறுகிறோம்!” என்றாள் கிழத் தேவதை.

இந்த உண்மையை நெடுமாறன் புரிந்து கொண்டான். பிறகு கிழத் தேவதையின் அருளால், அவனுடைய நீளமூக்கு குறுகிக் குறைந்து அழகாக மாறியது. அதன் பிறகு, வசந்த குமாரியை மணம் புரிந்து கொண்டு நெடுமாறன் மன மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான்.

நீ.மு. -2