பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை : ஒன்று

நீளமூக்கு நெடுமாறன்

ந்தர்வக் கோட்டை இளவரசி மலர்விழி மிகவும் அழகாக இருப்பாள். அவளை மணம் புரிந்து தன் பட்டத்து ராணியாக்கிக் கொள்ள வேண்டுமென்று தேவபுரத்து அரசன் பத்திரகிரி விரும்பினான். ஆனால் இளவரசி மலர்விழி அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை. ஏனென்றால், ஒரு மந்திரவாதி அவள் மீது ஒரு மந்திரம் போட்டிருந்தான். அதனால் மலர்விழி திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நினைக்கவேயில்லை.