பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

பத்திரகிரி ராஜன் மனம் வருந்தி ஒரு தேவதையிடம் சென்று "தாயே! இளவரசி மலர்விழி மனம் மாறி என்னை மனப்பதற்கு என்ன செய்யலாம்?" என்று கேட்டான்.

"இளவரசி மலர் விழியின் அரண்மனை அந்தப்புரத்தில் ஒரு பெரிய பூனை இருக்கிறது. அதன்மேல் அவளுக்கு உயிர். நீ போய் அந்தப் பூனையின் வாலை மிதித்துவிட்டால், மந்திரம் உடைந்து விடும். பிறகு மலர் விழி உன்னை நேசிப்பாள். உன்னைத் திருமண்ம் செய்து கொள்ளவும் இணங்குவாள்” என்றாள் தேவதை.

"ஒரு பூனை வாலை மிதிப்பதற்கு யாராவது பயப்படுவார்களா?" என்று கேட்டுவிட்டு பத்திரகிரி ராஜன் வேகமாக இளவரசியின் அரண்மனைக்குச் சென்றான். அவன் அரண்மனையின் அந்தப்புரக் கூடத்திற்குள் நுழைந்தவுடனே, "மியாவ் மியாவ்!" என்று கத்திக் கொண்டே அந்தப் பூனை தாவி வந்து அவன் காலில் உரசிக் கொண்டு நின்றது. பத்திரகிரி ராஜன் அதன் வாலில் காலை வைக்க முயன்றான். ஆனால், அவன் வாலை மிதிக்கக் காலைத் துக்கிய போதெல்லாம் அந்தப் பூனை மியாவ் மியாவ் என்று கத்தியவாறு சட்டென்று திரும்பிக் கொண்டது.

அன்று முழுவதும் பத்திரகிரி ராஜன் எவ்வளவோ முயன்றான். ஆனால் பூனையின் வாலை மிதிக்க முடியவில்லை. மறு நாளும் காலைத் தூக்கித் தூக்கி வைத்துப் பார்த்தான். ஒரு வாரம் வரை இப்படியே நடந்தது. ஆனால் நடந்த காரியம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. வால் இருக்கும் இடத்திற்கு நேரே பத்திரகிரி ராஜன் தன் காலை தூக்கும் போதெல்லாம் பூனை "மியாவ்! மியாவ்!” என்று கிறீச்சிட்டபடி உடனே தன் உடலைத் திருப்பி வாலைத் தூக்கிக் கொண்டுவிடும்.

ஒரு நாள் அந்த "மியாவ் மியாவ்" பூனை தூங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட பத்திரகிரி ராஜன்