பக்கம்:நூறாசிரியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

நூறாசிரியம்

ஆகிய ஐயறிவால் நிறையப்பெற்று மெய்யறிவால் விளங்கப் பெற்ற நாமாகிய மேனிலை உயிர்கள் அதன் தலைப்பிறவிகள். அவற்றிற்குக் காணுதலாகிய காட்சியும், கேட்டலாகிய கேள்வியும் இவ்விரண்டின்வழி விரியப்பெற்று இவ்வியக்கத்திற்குக் கருவாகிய கருத்தும், அதன் வழித்தோன்றி அவை வழிப் படுக்கும் வினைகளும்,ஓர் எல்லையுட்பட்ட ஆளுகைக்குரிய, அவ்வெல்லை யாவற்றினுக்கும் பொதுவினது.

அப்பொதுவினதாகிய எல்லைக்கண் நின்று இயங்கும் இயக்கத்து மீளாது நின்று ஒழுகி, அவ்வளவும், ஆட்சியும், வினையும், கருத்தும் கேள்வியும் காட்சியும் மக்களும் இயக்கமும் உண்மையும் உலகும் ஆகிய நிலைகளுள் ஒன்று நிலை கடந்து பிறிதுநிலை காணும் பெற்றியோர் அன்றிப் பிறர், பெருநிலைப்பட்ட ஒன்றாகிய மெய்ப்பொருளை அறிய மாட்டுவரல்லர் நிலைப்பெற்று நாம் இயங்கும் இவ்வுருள்நிலம் போன்ற எல்லாவற்றையும் மலர்த்தி அவிக்கும் தன்மையின் ஆகிய அம் மெய்ப்பொருளை நோக்கி உள்நின்ற வல்லுணர்வு அத்தகையினார்க்கன்றி, அவ்வெல்லைக்குள்ளும் வரையறைப்பட்ட ஐயறிவொடும், அவை அடித்தாய உலகின் புறத்து நிலையொடும், அத்தகையராகிய பிறரொடும் ஒன்று இருந்து, வேதியியல் விளங்கியல் முதலிய பொருள் பாகுபாட்டையும், உடலியல், உயிரியல் முதலிய மெய்ப்பாகுபாட்டையும், உளவியல், அளவியல் முதலிய உயிர்ப்பாகுபாட்டையும், மண்ணியல் விண்ணியல் முதலிய புடவிப் பாகுபாட்டையும், இணைப்பின் நீக்கித் தனித்தனி ஆய்ந்து பார்ப்பார்க்கு அவை முற்றும் ஒன்றுபட்டு, அவ்வொன்றுபட்ட வழி, ஒரு புது நிலை தோன்றி வெளிப்படுமாறு தொகுப்பாக நிற்கும் அவையும் அதுவும் விளக்கமுறத் தோன்றாவாம்.

இவை இங்ஙனமாக, இவ்வுலகத் தலைநிலை உயிர்களாகிய நீவிர் துங்கட்கு எல்லைத்தாய நாளைக்குள்ளேயே நும்நிலை ஊன்றி நல்லுணர்வில் நும்மைப்பொருத்துவீராக! அது வழித் தெளிவின் உணர்ந்து அம்மெய்ப்பொருள் நிலையினை இறுதி எனத் தேர்ந்து மயக்க மறுவீராக! நுமக்கு இவ்வுலகின்கண் வந்து வாயத்தவெல்லாம் அப்பொருள் நுமக்கு இரவாமலே கொடுத்த ஈகை எனக் கருதுவீராக; ஆங்குப் பெற்ற அவ்வீகப் பொருளை நும் ஆட்சிக்குட்பட்டவாகிய குறுகிய காட்சியும் உயிரும் மெய்யும் பொருந்திய உயிர்க்கெல்லாம் நீவிரும் இரவாமுன் ஈகுவீராக! ஒருவழிப்படா நிலையில் தும்வழித்தாகி, ஒருவழிப்பட்ட நிலையில் அம்மெய்ப்பொருள் வழிநிற்கும், நும் உயிர் மெய்யுட் பொருந்தியதாகிய உள்ளம் ஒதுக்குவனவற்றைப் பற்றுக்கோடாது இகழ்ந்து, தொடர்பற நுமக்குத் தொடர்பேற்படாதவழிப்புறத்தே தவிர்ப்பீராக; தவிர்த்த நிலையில் தொடர்பற்று நும்போலவே ஆற்றலொடு முன்னமே நிற்கும் அம் மெய்ப்பொருளோடு நீவிரும் நும்மைப் பொருத்திக் கொள்வீராக; இவ்வுலகம் போலும் ஒன்றின் சுழற்சி யியக்கத்துட்பட்டு உயிர் தேய்ந்து போகாத நல்லறிவினோரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/28&oldid=1234702" இலிருந்து மீள்விக்கப்பட்டது