பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

பழைய வீட்டுப் பாசத்தை அது மறக்க வில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன்.

தொலை பேசியில் அந்த வீட்டுக்காரரை அழைத்தேன். "உங்கள் நாய் மூன்று நாட்களாக ஒன்றும் தின்னவில்லை. நீங்கள் கொஞ்சம் வருகிறீர்களா?" என்று அழைத்தேன்.

உடனே அவர் புறப்பட்டு வந்தார்.

வாசற் படியில் அவர் கால் வைத்தது தான். உடனே, சிவாஜி எழுந்து பாய்ந் தோடியது. வாலை யாட்டிக் கொண்டே அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. முன் கால்களைத் தூக்கி யவர் மீது வைத்துக் கொண்டு நின்றது.

“இவ்வளவு அன்பான தோழனை ஏன் விற்க நினைத்தீர்களோ தெரியவில்லை. உங்கள் துன்பம் எதுவோ அதை நான் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. உடனே உங்கள் நாயை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏதாவது தின்னக் கொடுங்கள்.