பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

யால்தலைமுதல் கால்வரை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தார். கண்களையும் மூடிக் கொண்டார். எல்லாரும் தூங்குகிற போது பேய்வந்து தன்னைக் கொத்தினால், யார் உதவிக்கு வருவார்கள் என்று நினைத்துப் பார்த்தபோது அவர் நெஞ்சு நடுங்கியது.

நடு நடுவில் கிழவர் போர்வையை நீக்கி வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு நேரம். ஒரே இருட்டு. திடீரென்று ஏரியின் நடுவில் தண்ணிரில் யாரோ இரண்டு பேர் மோதிக் கொண்டு சண்டை போடுவது போன்ற ஒசை எழுந்தது. கிழவர் பயந்து துள்ளிப் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் மேல் போய் விழுந்தார்.

"பேய் பேய்!" கம்மலான குரலில் நடுக்கத்துடன் பேசினார்.

மற்ற செய்தியாளர்கள் எழுப்பப்பட்டனர். பெரிய ஒளிவிளக்குகள் ஏரியை நோக்கி ஒளி பெருக்கிப் பளிச்சிட்டன. ஏரியின் நடுவில் ஒரு பெரிய பறவை இறக்கைகளால்