பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43


ஓர் ஆயிரம் பொன் அந்தக் கலைஞர்களுக்கு வழங்கும்படி கட்டளையிட்டான்.

அவையில் இருந்தவர்கள் இதைக்கேட்டு வியப்படைந்தனர். ஊரெங்கும் இந்த உடையைப் பற்றியே பேச்சாய் இருந்தது.

ஊர்மக்கள் இந்த விந்தையான உடையில் அரசரைப் பார்க்க விரும்புவதால் மறுநாளே ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடுசெய்தார்கள் அமைச்சர் அவையினர்.

மறுநாள் ஊர்வலத்துக்குத் தான் அணிந்து கொள்ளப்போகும் அந்த உடையை, முன்னாலேயே பார்க்க வேண்டும் என்று அரசன் துடித்தான். ஆனால் தன் அவசரத்தை வெளியில் காட்டிக் கொள்ள அவன் விரும்ப வில்லை.

நள்ளிரவு நேரம். அரசன் வண்ணங்கி தன் படுக்கையிலிருந்து எழுந்தான்.

ஒரு காவல்வீரன் போல் மாறுவேடம் போட்டுக் கொண்டான். கலைஞர்கள் இருக்கும் கூடத்திற்குச் சென்றான். அந்த எத்தர்கள் மூன்று பேரும் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.